எங்கள் தலைவர்களை பேசினால் ஏற்கமாட்டோம்

கோவை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

முருக பக்தர்கள் மாநாட்டில் என்ன நடந்தது என்பதை ஆர்.எஸ்.பாரதி முழுமையாக அறியவில்லை. அண்ணாதுரை, ஈ.வெ.ரா., குறித்து மாநாட்டில் பேசுவர் என அ.தி.மு.க.,வினருக்கு தெரியாது.

பழனிசாமி தலைமையில், சுய மரியாதையோடு கொள்கையை விட்டுக் கொடுக்காத இயக்கமாக அ.தி.மு.க., உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் அண்ணாதுரை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்ன முடிவெடுத்தார் எனத் தெரியும்.

எங்கள் தலைவர்களை, முன்னோர்களை பேசினால், ஏற்றுக்கொள்ள மாட்டோம். கொள்கை வேறு; கூட்டணி வேறு. கொள்கையை பழனிசாமி எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement