வணிகர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க உதவி மையங்கள் துவக்கம்
சென்னை: தமிழக வணிகர் நல வாரியத்தில் 1 லட்சம் புதிய வணிகர்களை சேர்க்க, 338 வரி விதிப்பு அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக வணிகர் நலவாரியம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராகும் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இம்மாதம் 1ம் தேதி முதல் வரும் நவ., 30 வரை ஆறு மாதங்களுக்கு, உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய் கிடையாது என, அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, 88,849 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த கட்டண சலுகை வாயிலாக, மேலும் 1 லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜி.எஸ்.டி., சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்களில் ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்வோர், வாரிய உறுப்பினராகலாம். இதற்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்; பலருக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரியவில்லை.
இதனால், கடந்த 20ம் தேதி வரை, 682 பேர் மட்டும் உறுப்பினராகி உள்ளனர். எனவே, வணிகர்களுக்கு உதவுவதற்காக, 338 வரி விதிப்பு அலுவலகங்களிலும் உதவி மையங்களை, வணிகவரி துறை துவக்கியுள்ளது. அங்கு, ஆதார் கார்டு, ஜி.எஸ்.டி., பதிவு சான்று எடுத்துச் செல்ல வேண்டும். இந்த சான்று இல்லாதவர்கள், உள்ளாட்சிகளிடம் பெற்ற தொழில் உரிம சான்றுடன் சென்றால், உறுப்பினராக பதிவு செய்து தரப்படும்.
மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்