போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி

23

டெஹ்ரான்; அமெரிக்கா போர் நிறுத்தம் அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான் பின்னர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.



ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே மூண்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது, போர் நிறுத்தம் அமலாகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். அவரின் அறிவிப்பை ஈரான், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. போர் நிறுத்தம் தொடர்பான எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது.


பின்னர், போர் நிறுத்தத்தை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மூலம் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்த தருணத்தின் போது, இன்று அதிகாலையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது.


இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயம் அடைந்ததாகவும் அங்குள்ள மீட்பு சேவைகள் குழு அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரு கட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. 2 மணி நேரம் அலை, அலையாக வீசப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள முகாம்களை தாக்கின என்றும் கூறி உள்ளனர்.

Advertisement