வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடக்காது
சென்னை: கோவை மாவட்டம், வால்பாறை சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், அமுல் கந்தசாமி.
இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். இதனால், வால்பாறை தொகுதி காலியாக உள்ளது.
பொதுவாக, ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., பதவி காலியானால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
ஆனால், தற்போதைய தி.மு.க., அரசின் பதவிக்காலம், 2026 மே 9ல் முடிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.
எனவே, பொதுத் தேர்தலுக்கு, ஓராண்டு கூட இல்லாத நிலையில், வால்பாறை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement