புகார் பெட்டி
குப்பை எரிப்பால் பாதிப்பு
உளுந்துார்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே குப்பை மேடுகள் தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
-சிவராமன், உளுந்துார்பேட்டை.
சாலையோர குப்பையால் துர்நாற்றம்
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
-பாலாஜி, கள்ளக்குறிச்சி.
உலர்களமான தேசிய நெடுஞ்சாலை
கள்ளக்குறிச்சி தச்சூர் பகுதியில் பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நிற்கும் சாலை பகுதியில் விவசாய விளைபொருட்கள் கொட்டி காயவைக்கும் உலர் களமாக மாறிப்போனது.
--ராஜன், தச்சூர்.
சாலை, மின் விளக்கு வசதியில்லை
கள்ளக்குறிச்சி காமதேனு நகர் பகுதியில் சாலை மற்றும் தெருமின் விளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-சரண், கள்ளக்குறிச்சி.
பயணிகள் நிழற்குடை தேவை
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாதாதல் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
-அழகுராஜா, கள்ளக்குறிச்சி.
மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு