தமிழகம் எங்கும் போதைப்பொருள் கிடைக்கிறது

1

இறை நம்பிக்கையை வைத்து அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை, தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, ஜெயலலிதா திருச்சியில் முழங்கினார். ஆனால், பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்துள்ளது. பா.ஜ., எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்கிறதோ, அந்த கட்சி மறைந்துவிடும். அ.தி.மு.க.,வையும் பா.ஜ., கபளீகரம் செய்யும்.

கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரோ இல்லையோ, தமிழகத்தில் போதைப்பொருள் எல்லா இடத்திலும் பரவலாக கிடைக்கிறது. வரும் 9ம் தேதி, நாடு முழுதும் தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.

சுப்பராயன்

இ.கம்யூ., - எம்.பி.,

Advertisement