போலீஸ் என மிரட்டி மாமூல் தீயணைப்பு வீரருக்கு தர்ம அடி
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோட்டில், இரவில் செயல்படும் சிக்கன் பகோடா, பானிபூரி, டிபன் கடை உள்ளிட்ட சாலையோர கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு, காக்கி பேன்ட், டீ-சர்ட் அணிந்து பைக்கில் வந்த ஒருவர், ஆரணி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிவதாகக் கூறி, கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டுள்ளார்.
சில கடைகளில் பொருட்களை இலவசமாக கொடுக்க வற்புறுத்தினார். கடைக்காரர்கள், 50 -- 500 ரூபாய் வரை கொடுத்துள்ளனர். சில கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உபயோகிப்பதாகவும், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும் மிரட்டி வந்துள்ளார்.
நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிலர், மாமூல் தர மறுத்து அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டனர். அவர் தர மறுத்த நிலையில், மோசடி ஆசாமி என நினைத்து சரமாரியாக தாக்கி, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஆரணி அடுத்த கல்பூண்டியைச் சேர்ந்த கண்ணப்பன், 50; திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர் என, தெரிந்தது. மதுபோதையில், சில மாதங்களாக போலீஸ் எனக்கூறி கடைகளில் பணம் வசூலித்தது தெரியவந்தது.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி