விபத்தில் காதலன் பலி; காதலி தற்கொலை
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாரைபத்தியைச் சேர்ந்த வைரலட்சுமி 21, செவிலியர் படிப்பு முடித்தவர். விருதுநகர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். இவரது மாமா மகன் சச்சின் 24. இருவரும் காதலித்து வந்துள்ளனர். மே 9ல் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடந்த வாகன விபத்தில் சிக்கிய சச்சின் பலியானார்.
விரக்தி அடைந்த நிலையில் இருந்த வைரலட்சுமி, மனமுடைந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். வாழ்க்கையை வெறுத்த வைரலட்சுமி ஜூன் 20ல் பூச்சி மருந்தை குடித்தார். நள்ளிரவில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement