ஜூலை 14ல் மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு; திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்திற்காக
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 14ல் மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ஜூலை 13 மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
கும்பாபிஷேகத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் முந்தைய நாளான ஜூலை 13 இரவு புறப்பாடாகி திருப்பரங்குன்றம் செல்கின்றனர்.
இதன் காரணமாக ஜூலை 13 மாலை 6:00 மணி வரை மீனாட்சி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு மேல் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடக்கும்.
ஜூலை 14 கும்பாபிஷேக விழாவில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பாடாகி இரவு மீனாட்சி கோயிலுக்கு அம்மனும், சுவாமியும் திரும்புவர். அன்று நாள் முழுவதும் மீனாட்சி கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும்.
ஜூலை 13 மாலை 6:00 மணி முதல் ஜூலை 14 வரை பக்தர்கள் ஆயிரங்கால் மண்டப கலைக்கூடத்தை பார்க்கவும், அன்னதானத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவர்.
ஜூலை 15 அதிகாலை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்படும்.
மேலும்
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்