நெல்லித்தோப்பு தொகுதியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை 

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் அண்ணா நகரில் நடந்தது.

மாநில மாணவரணி துணை அமைப்பாளர் கண்ணன் வரவேற்றார்.

தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் உறுப்பினர் படிவங்களை வழங்கி, நெல்லித்தோப்பு தொகுதி யில் இருந்து 2 ஆயிரம் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சி அமைந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும், புதிய தொழிற்சாலை கொண்டு வர முயற்சி செய்வோம், மூடி இருக்கும் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை சரிசெய்து திறக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், அவைத் தலை வர் பானு கணேசன், மாநில தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் அருண், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ரமேஷ், வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் ஞானராஜன், இளைஞர் அணி ராம்குமார், மாணவரணி விஷ்வா, சாருமதி, ராகுல், ராஜசேகர், அருண், கோகுல்நாத், யோகேஷ், கோகுல், நிர்வாகிகள், ஞானவேல், உமாபதி, புருஷோத்தமன், யுவராஜ் அசோக், சதீஷ், ஸ்ரீதர், தமிழ், பாபு, ஹரிஷ், வசந்த், சூர்யா, சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement