மாணவர் தலைவர் பதவியேற்பு

விழுப்புரம் :விழுப்புரம் நாஹர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.

விழுப்புரம் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், மாணவர்களை கவுரவித்து சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் உமாமகேஸ்வரி பாராட்டி பேசினார். இதில், மாணவர் தலைவர்கள் பதவியேற்றனர்.

பள்ளி முதல்வர் அரசப்பன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Advertisement