ஹோலி ஏஞ்சல் பள்ளியில் கருத்தரங்கம்
மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நிறுவனர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். ஹோலி ஏஞ்சல் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கீர்த்தி வாசன் வரவேற்றார்.
கோயம்புத்துார் அம்பாள் துளசி பள்ளி முதல்வர் சார்லின், ஜோசப் குளோபல் பள்ளி முதல்வர் கம்பெனி சகாய பெனிஸ்டன் ஆகியோர் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களுக்கு கலை சார்ந்த கல்வியை ஆடல் பாடல் மூலம் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து யோகா பயிற்சியை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். மயிலம் அருகே உள்ள பள்ளிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement