சொத்து வரி உயர்வு: பேச்சுவார்த்தை தோல்வி

வானுார் : சொத்துவரி உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பூத்துறை கிராமத்தில் நகர பகுதியை விட கூறுதல் வரி வசூலிக்கப்படுவதாக அதன் உரிமையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டமைப்பு தலைவர் குமரன் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இது குறித்து கூட்டமைப்பு சங்கத் தலைவர் கூறுகையில், 'கடந்த 2021ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2022ம் ஆண்டும் 100 சதவீத வரியை உயர்த்தினர். 5 ஆண்டுகளுக்கு வரியை உயர்த்தக் கூடாது. ஆனால், பூத்துறையில் மட்டும் ஆண்டுதோறும் வரியை உயர்த்துகின்றனர். வரி செலுத்தாததால், நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் வருகிறது' என்றார்.

Advertisement