இஸ்ரேலுடன் போர்: நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், ''இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும்.
24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறியதாவது: இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறிய ஈரான், சில மணி நேரங்களில்
@block_Y@block_Yஇஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இஸ்ரேல் பிரதமருடன் அதிபர் டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (7)
ஆரூர் ரங் - ,
24 ஜூன்,2025 - 10:12 Report Abuse

0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
24 ஜூன்,2025 - 09:57 Report Abuse

0
0
SANKAR - ,
24 ஜூன்,2025 - 10:41Report Abuse

0
0
Reply
K.Uthirapathi - ,இந்தியா
24 ஜூன்,2025 - 08:21 Report Abuse

0
0
Jack - Redmond,இந்தியா
24 ஜூன்,2025 - 10:02Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
24 ஜூன்,2025 - 07:39 Report Abuse

0
0
visu - tamilnadu,இந்தியா
24 ஜூன்,2025 - 08:19Report Abuse

0
0
Reply
மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
Advertisement
Advertisement