அன்னியூர் அரசு கல்லுாரியில் கலந்தாய்வு துவங்கியது

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கல்லுாரியில் 3 நாள் கலந்தாய்வு நேற்று துவங்கியது.

இக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சிறப்பு பொது கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், நேற்று முதல் நாளை 25ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 4ம் கட்ட சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

நேற்று துவங்கிய கலந்தாய்வில் விண்ணப்பித்த அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களோடு பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து சேர்க்கை செய்தனர்.

Advertisement