தனியார் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

உளுந்துார்பேட்டை,ஜூன் 24-
உளுந்துார்பேட்டை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை இறந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த பெரியமாரனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 32; விவசாயி.
இவர், நேற்று காலை களமரூதுாரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு பெரியமாரனோடைக்கு செல்வதற்காக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்ட ரில் சென்றார்.
அப்போது தனது இரண்டரை வயது மகன் தன்வேந்தனை ஸ்கூட்ட ரில் அமர வைத்து அழைத்துச் சென்றார்.
9:00 மணியளவில் ஒரத்துார் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மினி பஸ்சை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது மினி பஸ் திடீரென பிரேக் போட்டதால், பைக் மோதியதில் தவறி கீழே விழுந்த குழந்தை தன்வேந்தன், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தது.
விபத்து குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்