மதுரை விமான நிலையத்தில் ரூ.3 கோடி கஞ்சா

அவனியாபுரம் : தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள கஞ்சாவை மதுரை விமான நிலையத்தில் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து மதுரை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். ஒரு பயணி கொண்டு வந்த பெட்டியில் மூன்று கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.3 கோடியாகும். கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவினர் கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அவர் துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த மீரான்பாய் அலி அப்துல்காதர் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்