காலாப்பட்டு தொகுதியில் சாலை பணிகள் துவக்கம்

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
காலாப்பட்டு தொகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆலங்குப்பம் அன்னை நகர், அம்பேத்கர் தெரு, புது தெருவில் ரூ. 29 லட்சத்து 85 ஆயிரத்து 958 மதிப்பீட்டில் 'எல்' வடிவ வடிக்கால் வாய்க்கால், இந்திரா நகர் குறுக்கு தெருவில் ரூ. 29 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டிலும், சஞ்சீவி நகர், கன்னியம்மன் கோவில் வீதியில் 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, மாரியம்மன் கோவில் வீதி, திரவுபதி அம்மன் கோவில் வீதி, முனுத்தி மங்கலம் வீதிகளில் ரூ.91 லட்சத்து 52 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் சாலை உள்ளிட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 67ஆயிரத்து 437 ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள், வடிக்கால் வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில், தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தலைமை தாங்கி, பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மேலும்
-
தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!
-
போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்
-
மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்
-
பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ., தகவல்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி