22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட வைத்த நமது ராணுவம்; பிரதமர் மோடி பெருமிதம்

6

புதுடில்லி: ''தேச நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


@1brடில்லியில் நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியதின்
நூற்றாண்டு விழாக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன்பு நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தியின் சந்திப்பு சுதந்திர இயக்கத்திற்கு ஒரு புதிய உத்வேகம் அளித்தது. ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள் முழு மனிதகுலத்திற்கும் ஒரு பெரிய சொத்து.


பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ''ஆபரேஷன் சிந்தூர்'' உலகிற்கு தெளிவுப்படுத்தி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் உதவியுடன் நமது படைகள் எதிரிகளை 22 நிமிடங்களில் மண்டியிட வைத்தன. வரும் காலங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன். தேச நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.


பாகிஸ்தான் உடன் மோதலின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் திறன் தெளிவாக தெரிந்தது. இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த
மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். எந்தவொரு பாகுபாடும் காட்டாமல், ஆன்மிக கொள்கைகள் அடிப்படையில் அரசு செயல்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement