தமிழக ஏற்றுமதியை அதிகரிக்க 'ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம்'

சென்னை: தமிழகத்தில் இருந்து வேளாண், உணவு, கடல் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், நிறுவனங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே இடத்தில் விளக்கம் அளிக்கவும், தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ், 'எக்ஸ்போர்ட் புரோமோஷன் டெஸ்க்' என்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தை துவக்கிஉள்ளது.
தமிழகத்தில் வேளாண் விளை பொருட்கள் மற்றும் அவை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணிகளை, டி.என்.எபெக்ஸ் எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் செய்கிறது.
முக்கிய காரணம்
இது, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படுகிறது.
தமிழகத்தில் வேளாண் பொருட்களில் இருந்து ஊட்டச்சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
அவற்றின் தயாரிப்புகளுக்கு, வெளிநாடுகளில் தேவை இருந்தாலும், ஏற்றுமதியில் ஈடுபட பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. இதற்கு, ஏற்றுமதி வழிமுறை தெரியாததே முக்கிய காரணம்.
இந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தற்போது, தமிழக ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தை டி.என்.எபெக்ஸ் அமைத்து உள்ளது.
இதில் ஏற்றுமதி ஆய்வு முகமை, தேசிய நறுமண பொருட்கள் வாரியம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட 10 நிறுவனங்களின் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சந்தேகங்களுக்கு தீர்வு
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் வேளாண், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய விரும்பினால், சென்னை கிண்டியில் டி.என்.எபெக்ஸ் அலுவலகத்தில் உள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தை, 95002 61727, 95002 61827 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்றுமதிக்கு உரிமம் பெறுவது எப்படி உட்பட, ஏற்றுமதி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் முதன்முறையாக தேர்த்திருவிழா
-
'நீட்' தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
-
அஜய் வாண்டையார் கும்பல் அட்டூழியம் 22 பேர் கைது ; 5 பேருக்கு குண்டாஸ் சென்னை மாநகர போலீசார் அறிக்கை:
-
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.486.47 கோடி கடன் வழங்கல்
-
நாட்டுக்கோழி பண்ணை விண்ணப்பிக்க அழைப்பு
-
3,000 கொடிக்கம்பம் அகற்றம்; கோர்ட் எச்சரிக்கையால் வேகம்