மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.486.47 கோடி கடன் வழங்கல்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம்.

புதியதாக தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம் பாட்டு திட்டங்களில், தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கி வருகிறது.

கடந்த 2021 - 22 நிதியாண்டில், 111.58 கோடி ரூபாய், 2022 - 23 நிதியாண்டில், 107.61 கோடி, 2023 - 24 நிதியாண்டில், 171.42 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2024 - 25 நிதியாண்டில் இதுவரை, 421 பேருக்கு, 96.39 கோடி ரூபாய் என, கடந்த நான்கு ஆண்டுகளில், 1,910 தொழில்முனைவோருக்கு, 129.18 கோடி மானியத்தில், மொத்தம் 486.47 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பல்லடத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியான கனிமொழி, அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மானியத்தில், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

சொந்தமாக பனியன் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் அவர், 15 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவதாகவும்; நல்ல லாபம் பெற முடிவதாகவும், தெரிவித்துள்ளதாக, மாவட்ட தொழில் மையத்தினர் கூறியுள்ளனர்.

Advertisement