'கேட்' விழுந்த விபத்து காவலாளி உயிரிழப்பு

மணலி,
மணலிபுதுநகர், வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி, 64. இவர், விச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.
கடந்த 14ம் தேதி காலை 9:00 மணியளவில், நிறுவனத்தின் பிரதான கேட்டை மூடும்போது, எதிர்பாராதவிதமாக கேட் அடியோடு சரிந்து, குமாரசாமி மேல் விழுந்தது. இதில், மார்பு, கால் பகுதியில் பலத்த காயமடைந்த குமாரசாமியை, அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்டனர். இந்த நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாரசாமி, நேற்று உயிரிழந்தார்.
விபத்து குறித்து, மணலி புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பள்ளி முன் கழிவு நீர் தொற்று பாதிப்பில் மாணவர்கள்
-
மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த 'விதுாத்' திட்டம்
-
மின்வாரியம், நீர் வளத்துறை 'ஈகோ'வால் இருளில் தவிக்கும் சோத்துப்பாறை அணை
-
சுருளி அருவியில் தர்ப்பணம் தரும் இடத்தில் சுகாதாரக்கேடு
-
பிரதமர் சூரிய வீடு மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு
-
புதிதாக 22 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள்
Advertisement
Advertisement