சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் இரவில் அடிக்கடி மின் தடை

சிவகாசி: சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் குறைந்த அழுத்த மின்சாரத்தாலும், இரவில் அடிக்கடி ஏற்படும் மின் தடையாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு திருத்தங்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இங்கு குறைந்த அழுத்த மின்சாரமே கிடைப்பதால் மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. மோட்டார் மூலமாக குடிநீர் ஏற்றுவதற்கு வழி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு 10:00 மணி நள்ளிரவு ஒரு மணி என அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தவிர பகலிலும் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மகாலிங்கம், அதிவீரன்பட்டி: இப்பகுதியில் பகல், இரவு என அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் மின்தடையால் குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் கிடைக்கின்ற மின்சாரமும் குறைந்த அழுத்தத்தில் வருகின்றது. இதனால் மின் சாதனங்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

Advertisement