தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கிளை சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பிரபு வரவேற்றார். மாநில பொருளாளர் செல்வராசன், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் அடிப்படை ஊதியத்தில், 20 சதவீதம் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் பாரதி, தேவகி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
1 குவின்டால் மாம்பழம் ரூ.1,616 நிர்ணயித்த அரசு
-
இனி 10ம் வகுப்பு பொது தேர்வு ஆண்டுக்கு... இரண்டு முறை; 2026ல் அமல்படுத்த சி.பி.எஸ்.இ., அனுமதி
-
'கோமுல்' இயக்குநர் பதவிக்கு தேர்தல் காங்கிரஸ் 9; தே.ஜ., கூட்டணி 4ல் வெற்றி
-
கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு
-
ரசாயன ஆலையில் தீ; டில்லியில் நால்வர் பலி
-
அடிக்கடி 'உறவு'க்கு அழைத்த பெண்; கொலை செய்த கள்ளக்காதலன் கைது
Advertisement
Advertisement