முதல்வரின் வீடுகள் திட்டம் 133 பேருக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.3.59 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம் வரவேற்றார்.
ஊரகப்பகுதிகளில் கடந்த 2001ம் ஆண்டுகளுக்கு முன், அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில், தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு புதிய வீடு கட்ட ரூ.2.70 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.
அதன்படி, சின்னசேலம் ஒன்றியத்தில், இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 133 பயனாளிகளுக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி பணி ஆணை வழங்கினார்.
அப்போது, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மணி வடமலை, ஊராட்சி தலைவர்கள் கண்ணன், மல்லிகா, அனுசெல்லப்பிள்ளை, மகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர். பி.டி.ஓ., சவரிராஜ் நன்றி கூறினார்.
மேலும்
-
இன்று முதல் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை
-
கேரளாவில் மீண்டும் கனமழை வயநாட்டில் வெள்ளப்பெருக்கால் அச்சம்
-
யானைகள் வேட்டையை ஒழிக்க வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
-
சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது
-
அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தேர்வு