பிரித்தியங்கரா கோவிலில் அமாவாசை வழிபாடு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, பிரித்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் அகத்தீஸ்வரர் பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு யாகம் நடந்தது. தொடர்ந்து, அதில் மிளகாய் வற்றல் சாற்றப்பட்டது.

பக்தர்கள் வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சாற்றினர்.

தொடர்ந்து, தீபாராதனை வழிபாடு நடந்தது.

Advertisement