ரத்த தான முகாம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் சிவா தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குமாரசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில், மது மற்றும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள், ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று 38 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மருந்தாளுநர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement