ரத்த தான முகாம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் சிவா தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குமாரசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில், மது மற்றும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள், ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று 38 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மருந்தாளுநர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி
-
'பாராசிட்டமால் 650' மாத்திரைக்கு கர்நாடக சுகாதார துறை தடை
-
1 குவின்டால் மாம்பழம் ரூ.1,616 நிர்ணயித்த அரசு
-
இனி 10ம் வகுப்பு பொது தேர்வு ஆண்டுக்கு... இரண்டு முறை; 2026ல் அமல்படுத்த சி.பி.எஸ்.இ., அனுமதி
Advertisement
Advertisement