3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது

அலாஸ்கா : நம் அண்டை நாடான சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு 'மார்னிங் மிடாஸ்' என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 மின்சார கார்கள் உட்பட 3,000 புதிய கார்கள் இருந்தன.
அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு தென்மேற்கே 490 கி.மீ., துாரத்தில் பசிபிக் கடலில் சென்றபோது, இந்தக் கப்பலில் திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து சரக்கு கப்பலை அப்படியே விட்டுவிட்டு, கப்பல் ஊழியர்கள் தப்பினர். இவர்களை, கடலோர காவல் படையின் மீட்டனர்.
தீயை அணைக்கும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்ட நிலையில், மோசமான வானிலை மற்றும் கப்பலில் நீர்க்கசிவு ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் மார்னிங் மிடாஸ் கப்பல் கடலில் மூழ்கியது.
இதை கப்பல் நிறுவனமான லண்டனை சேர்ந்த 'சோடியாக் மேரிடைம்' உறுதி செய்துள்ளது. எனினும் அந்த கப்பலில் இருந்த 3000 கார்கள், அதில் இருந்து மீட்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

மேலும்
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல் கசிவு; பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்