கபினி அணையில் விரிசல்
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் விரிசல் மற்றும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. 'அணையில் நீர்மட்டம் குறைந்ததும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்' என அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டே தாலுகாவில் கபினி அணை உள்ளது. இந்த அணை, கர்நாடகா, தமிழகத்துக்கு உயிர் நாடியாக விளங்குகிறது. இது, 50 ஆண்டுகள் பழமையானது.
நீரின் அழுத்தம் காரணமாக, அணை கற்களுக்கிடையே விரிசல், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. 'இவற்றை பராமரித்து, சரி செய்யாவிட்டால் அணைக்கு அபாயம் ஏற்படும்' என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் அதிகாரிகள், அணையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அறிக்கை அடிப்படையில் அணையை பராமரிக்க 32.35 கோடி ரூபாய் செலவிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அரசு அனுமதி அளித்தும், பணிகளை துவக்க முடியவில்லை.
'காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் கன மழை பெய்ததால், தற்போது கபினி அணை நிரம்பியுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பியுள்ளதால், பணிகளை துவக்க முடியவில்லை.
'அணையின் நீர்மட்டம் குறைந்த பின், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; விசாரணையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சிறப்பு குழு தகவல்
-
இறுதி மூச்சு இருக்கும் வரை... அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி
-
பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு
-
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
-
அண்ணனுார் சாலையில் வேகத்தடை வேண்டும்
-
குப்பையால் சுகாதார சீர்கேடு வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து