கர்நாடகா அணைகளில் இருந்து 65,000 கனஅடி நீர் திறப்பு; ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

தருமபுரி: கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 120.90 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.194 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 33,000 கனஅடியாக உள்ளது.
கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
இதனால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 24,000 கனஅடியாக இருந்த நிர்வரத்து 32,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. நீர் இருப்பு 82.34 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 18,290 கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்
-
சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பியதால் குடும்பம் நடத்திய சிறுவன் தற்கொலை
-
இத்தாலி பேஷன் ஷோவில் கோலாப்புரி செப்பல்
-
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு; ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது!
-
கூவிக்கூவி அழைத்த இளைஞர்; இணையத்தில் டிரெண்டிங் ஆனது கூமாப்பட்டி!
-
தி.மு.க.,வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? கட்சி நிர்வாகி கொலைக்கு இ.பி.எஸ்., கடும் கண்டனம்
-
விண்வெளியில் இருந்து வணக்கம்: இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா நெகிழ்ச்சி