குடிநீர் கோரி போலீஸ் குடும்பத்தினர் மறியல்

சென்னை,சென்னை, கிரீம்ஸ் சாலையில், நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், மறியல் செய்தவர்களை சமாதானம் செய்தனர்.

பின், அவர்களிடம் விசாரித்ததில், மறியலில் ஈடுபட்டவர்கள், மக்கீன்ஸ் கார்டன் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் என்பது தெரியவந்தது. அதன்படி, காவலர் குடியிருப்பில், 92 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக, முறையாக லாரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த காவலர் குடும்பத்தினர், மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement