செய்திகள் சில வரிகளில் ...

 ஏ.ஐ.சி.எப்., எனும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, ஆலோசனைக் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், சிறந்த வீரர், வீராங்கனையருக்கு, அவர்களின் தரவரிசை அடிப்படையில், காலாண்டு உதவித் தொகையாக, 60,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதலீட்டு நிதியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அண்ணா பல்கலையின் கீழ், 440 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2 லட்சம், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், இன்று வெளியிடுகிறது.

Advertisement