மொபைல் போன் திருடியவர் கைது
மடிப்பாக்கம்:வேளச்சேரியைச் சேர்ந்தவர் மீனா, 27. இவர், மடிப்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 20-ம் தேதி மொபைல் போனை இருக்கையில் வைத்துவிட்டு, வேறு அறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, மொபைல் போன் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன், 66, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement