பி.எஸ்.சி., நர்சிங் நுழைவு தேர்வு நாளை 9 மையங்களில் நடக்கிறது

புதுச்சேரி, ஜூன் 28-

பி.எஸ்.சி., (நர்சிங்) சென்டாக் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு நாளை 29ம் தேதி நடக்கிறது.

சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு:

2025-26ம் ஆண்டுக்கான பி.எஸ்சி., (நர்சிங்) சென்டாக் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு நாளை 29ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரியில் 5 மையங்களிலும், காரைக்காலில் 2, மாகி, ஏனாம் தலா 1 மையங்களிலும் தேர்வுகள் நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் நுழைவு சீட்டில் உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும், விவரங்கள் மற்றும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2229355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement