6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

தரமணி:தரமணி மேம்பால ரயில் நிலைய பகுதியை, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.

அங்கு, சந்தேகத்திற்கிடமான முறையில் பையுடன் சுற்றி வந்த நபரை, நேற்று பிடித்தனர். வடமாநில நபரான அவரது பையை சோதனையிட்டதில், 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மேற்கு திரிபுராவைச் சேர்ந்த முஜகிதுள் இஸ்லாம், 29, என்பவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

Advertisement