போதை ஒழிப்பு விழிப்புணர்வு

வானுார் : கிளியனுார் டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெய்சாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியை சுமதி வரவேற்றார்.
ஆசிரியை வசந்தி , போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சியில் பெற்ற தகவல்கள் குறித்து விளக்கினார். ஆசிரியைகள் ரேவதி, ஜெகஷிஜா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் கிளியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசி, சப் இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியை பள்ளி ஜே.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஒருங்கிணைத்தார். பட்டதாரி ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement