உழவரைத்தேடி வேளாண்மை திட்டம்

வானுார் : தேவனந்தல் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் நேற்று துவங்கப்பட்டது.

வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் முகாமை துவக்கி வைத்து, வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் இதர சார்பு துறை அலுவலர்கள், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறினார்.

தலகாணிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் விவசாயிகளுக்கு, இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் பக்தவச்சலம், தோட்டக்கலைத்துறை சம்பந்தமான திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளிடமிருந்து கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் தங்கம், ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி செய்திருந்தனர்.

Advertisement