டெய்லரை தாக்கிய ஐந்து பேர் கைது
புதுச்சேரி : டெய்லரை தாக்கிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மோகன் நகரை சேர்ந்தவர் சுந்தரன், 43; டெய்லர். இவர், சாரம் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மனைவி யிடம், பேசியுள்ளார். இது தொடர்பாக, இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த, அருள்தாஸ், 38; அவரது ஆதரவாளர்கள் முத்திரையர்பாளையம் பெருமாள்ராஜ், 27; குறிஞ்சி நகர் ரஞ்சித், 24; சண்முகாபுரம் அருணாச்சலம், 25; கலைவாணர் நகர் உதயகுமார், 21; ஆகியோர் சுந்தரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த சுந்தரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர், அளித்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, அருள்தாஸ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement