வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
வடலுார் : வாலிபரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தினர்
வடலுார் அடுத்த பின்னாச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூவராகசாமி, 28. நேற்று முன்தினம் இவருக்கும், அவரது சகோதரர் ஏழுமலை உள்ளிட்டோர் இடையே பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது பூவராகசாமியை ஏழுமலை தரப்பினர் கட்டையால் தாக்கி, பைக்கை சேதப்படுத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் ஏழுமலை, பாலாஜி உட்பட 3 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement