கோவிலில் நகை திருட்டு
தளி: தளி அருகே நாகசந்திரம் கிராமத்தில், மாரியம்மா, கரகதம்மா, பசு-வேஸ்வர சுவாமி கோவில்கள் உள்ளன. பூசாரியாக மஞ்சுநாத், 48, ஸ்ரீராமப்பா, 65, உள்ளனர். கடந்த, 24ம் தேதி இரவு, 10:00 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு, மல்லேகவுடு, 80, என்பவ-ரிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் காலை மஞ்சுநாத் வந்து பார்த்த போது, பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த, 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. மர்ம நபர்களை தளி போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement