தந்தை, மகன் இருவரை தாக்கிய ஐந்து பேர் கைது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்த வேலு, 55, டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மகன் தமிழரசன், 30, தனது சொந்த வாகனத்-திலேயே டிரைவராக பணிபுரிகிறார். கடந்த வாரம், ஊத்தங்கரை நேரு நகரை சேர்ந்த சீனிவாசன், திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்-காக தமிழரசனுக்கு சொந்தமான இரண்டு டிராவல்ஸ் வாகனங்-களை முன்பதிவு செய்தார். நேற்று முன்தினம் காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென திருமணம் நின்று விட்ட-தாக கூறி, முன்பதிவு செய்யப்பட்டிருந்த தமிழரசனின் வாகனங்-களை வேண்டாம் என கூறியுள்ளார். பிறகு வேறொரு டிராவல்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.இதையறிந்த தமிழரசன், ஏன் எனது வாகனங்களை வேண்டாம் என்று மறுக்கிறீர்கள், உங்களுக்காகத்தானே நான் வேறு நபர்களுக்-கான முன்பதிவுகளை தவிர்த்து காத்திருந்தேன் என்று கூறி, சீனிவாசனுடன் மொபைல்போனில் வாக்குவாதத்தில் ஈடு-பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு நேரு நகரை சேர்ந்த சீனிவாசன், 35, அவரது உறவினர்கள் பூங்கா-வனம், 41, திருமால், 37, தங்கராஜ், 21 மற்றும் 16 வயது சிறுவன், பாவாடை (எ)தமிழரசன், 27,ஆகியோர் தமிழரசன் இருக்கும் இடத்தை அறிந்து, ஆறு பேர் கொண்ட கும்பல் டிராவல்ஸ் ஸ்டாண்டுக்கு சென்று, அங்கிருந்த தமிழரசன், அவ-ரது தந்தை வேலு, 55, ஆகிய இருவரையும் கட்டையால் தாக்-கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஊத்தங்கரை போலீசார் விசாரித்து சீனிவாசன், பூங்காவனம், திருமால், தங்கராஜ், 16 வயது சிறுவனை கைது செய்தனர். தலை-மறைவாக உள்ள பாவாடை (எ) தமிழரசனை தேடி வருகின்-றனர்.

Advertisement