மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி
ராசிபுரம்: மத்திய அரசு நலத்திட்டப்பிரிவின், மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின், 'ஜன சிக்ஷான் சன்சதன்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் பயிற்சி, ஆண்களுக்கு பைக் மெக்கானிக், எலக்ட்ரீஷியன் பிளம்பர், பெயின்டிங் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நாமகிரிப்பேட்டை பகுதியில், 10 குழுகளுக்கு மேல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ராசிபுரம் மற்றும் வெண்ணந்துார் பகுதிகளில் இது போன்ற பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.விருப்பமுள்ளவர்கள், எந்த கிராமத்திற்கு தொடங்க வேண்டும் என்று விபரத்தை தெரிவித்தால் அவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக பயிற்சி வழங்கப்படும் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சான்றிதழ் வழங்கப்படும் அவர்களுக்கு வங்கி மூலம் தொழில் தொடங்குவதற்கு கடன் பெறுவதற்கு வழி காட்டப்படும். விபரங்களுக்கு, 9884255511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை