தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகி கொலை: போலீசில் மூவர் சரண் போலீசில் மூவர் சரண்

சின்னமனுார்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் ரூ.18 லட்சம் கொடுக்கல்,வாங்கல் பிரச்னையில் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் 34, கொலை செய்யப்பட்டார்.

சின்னமனுாரை சேர்ந்த சுருளிமணி 43, முத்துராஜா 35, முத்துலாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் 35 போலீசில் சரண் அடைந்தனர்.

மார்க்கையன்கோட்டை பேரூராட்சி, பெருமாள் கோயில் தெரு, மனோகரன் மகன் பிரபாகரன். இவர் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். டிராவல்ஸ், வட்டி தொழில் செய்தார்.

இவரது நண்பர் சின்னமனூர் மெயின்ரோட்டில் பேக்கரி நடத்தி வரும் சுருளிமணி.இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.

சுருளிமணியின் மனைவி ஜெயபிரியாவிற்கு, பிரபாகரன் ரூ.18 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.

இந்த கடன் தொடர்பாக சுருளிமணிக்கும், பிரபாகரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த முன் விரோதத்தால் சுருளிமணி, ஜெயபிரியாவின் தம்பி முத்துராஜா 35, நண்பர் முத்துலாபுரம் பிரபாகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு மார்க்கையன்கோட்டைக்கு சென்றுள்ளனர்.

பிரபாகரனை பஸ் நிலையத்திற்கு வருமாறு அலைபேசியில் அழைத்துள்ளனர்.

அங்கு வந்த பிரபாகரனை, மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தினர். அதே இடத்தில் பிரபாகரன் இறந்தார்.

மூவரும் சின்னமனூர் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றார்.

Advertisement