இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

ஜெய்ப்பூர்: ஜெய்சால்மரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் என இருவரது சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் என இருவரது சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பாகிஸ்தான் நாட்டு அடையாள அட்டைகள் மற்றும் சிம் கார்டுகள் மீட்கப்பட்டது. இது காதல் விவகாரமா அல்லது சதித்திட்டமா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என ஜெய்சால்மர் போலீசார் தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே இருவரது சிதைந்த உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.


மேலும்
-
போலீசால் மட்டும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது: ம.பி., டி.ஜி.பி.,
-
ரூ.60 லட்சம் மதிப்புள்ள 286 கிராம் போதை பொருள் பறிமுதல்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது
-
அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு; எப்-16 போர் விமானத்தை காணவில்லை என்கிறது உக்ரைன்!
-
ஒடிசா கூட்ட நெரிசல் சம்பவம் : கலெக்டர், எஸ்.பி., டிரான்ஸ்பர்
-
உயிர்களை பாதுகாப்பது முக்கியம்: கூட்ட நெரிசலில் 3 பேர் பலிக்கு ராகுல் இரங்கல்