குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாகவே குறைவான மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், வீடுகளில் உள்ள எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அண்ணாநகர் அருகிலேயே உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த மின்னழுத்தத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
-
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சோகம்
Advertisement
Advertisement