திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது

10


திருப்பூர்: திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்து இருந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர், 30, ரவி ராஜா, 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் குப்பாண்டம்பாளையத்தில், நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடந்து வருகிறது. வட மாநில வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக குற்ற நுண்ணறிவு தடுப்புப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குப்பாண்டம்பாளையத்திற்கு சென்று நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளது குறித்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.



அப்போது, விற்பனை செய்வதற்காக இரு நாட்டுத் துப்பாக்கியை, பீஹார் மாநில வாலிபர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது.
நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர், 30, ரவி ராஜா, 25, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் இதற்கு முன் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளனர் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement