மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மணிகண்டன் என்பவர் வாங்கிய ரூ.6 லட்சம் கடனுக்காக ரூ.64 லட்சம் திருப்பி தர வேண்டும் என கேட்டு, அவரது தந்தையை காரில் கடத்திய கந்துவட்டி கும்பல், கைவிரலை வெட்டினர். இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன்(71). இவரது மகன் மணிகண்டன். பலசரக்கு கடை மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளார். வியாபாரத்தை விரிவுபடுத்த பழனிச்சாமி என்பவரிடம் கடன் பெற்றுள்ளார்.
அவர், ரூ. 6 லட்சம் கடன் பெற்ற நிலையில் 64 லட்ச ரூபாய் திருப்பி தர வேண்டும் என கந்துவட்டி கும்பல் கேட்டுள்ளது.
இதனை தர முடியாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நடராஜன் மற்றும் அவரது மகன் சென்று விட்டனர். இன்று காலை பழனிச்சாமி ஆதரவாளர்கள் நடராஜனை காரில் கடத்தியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரித்த போலீசார், நடராஜனை சீர்காழியிலிருந்து கடத்தி கடலூர் அருகே வரும்போது கும்பலை மடக்கி பிடித்தனர்.
வாங்கிய கடனை, மகன் திருப்பி தராத காரணத்தினால் நடராஜனை கடத்திய அக்கும்பல் உடல் முழுவதும் கடுமையாக உதைத்து தாக்கியதுடன் கைவிரலையும் துண்டித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது.
நடராஜனை தாக்கிய ஐந்து பேரை கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (19)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
30 ஜூன்,2025 - 21:56 Report Abuse

0
0
Reply
தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 21:47 Report Abuse

0
0
Reply
Mecca Shivan - chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 20:49 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 ஜூன்,2025 - 20:27 Report Abuse

0
0
Reply
MARAN - chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 19:21 Report Abuse

0
0
Reply
yts - ,
30 ஜூன்,2025 - 19:18 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 20:58Report Abuse

0
0
Reply
Viswanathan B N - ,இந்தியா
30 ஜூன்,2025 - 19:04 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
30 ஜூன்,2025 - 18:52 Report Abuse

0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 18:26 Report Abuse

0
0
Reply
suresh guptha - hyd,இந்தியா
30 ஜூன்,2025 - 18:19 Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
விம்பிள்டன்: போராடி வென்றார் அல்காரஸ்
-
வீடு கட்டும் முன் மண் பரிசோதனை அவசியம்; தாங்கும் திறன் அறிந்தால் கவலை இல்லை
-
விசாரணை மரணங்களில் சாதனை: தமிழக அரசு மீது சீமான் குற்றச்சாட்டு
-
தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு: வீடுகளுக்கு இல்லை
-
ஆயுஷ் ஷெட்டி 'சாம்பியன்': யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்
-
விம்பிள்டன்: இரண்டாவது சுற்றில் சபலென்கா
Advertisement
Advertisement