மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்

26

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மணிகண்டன் என்பவர் வாங்கிய ரூ.6 லட்சம் கடனுக்காக ரூ.64 லட்சம் திருப்பி தர வேண்டும் என கேட்டு, அவரது தந்தையை காரில் கடத்திய கந்துவட்டி கும்பல், கைவிரலை வெட்டினர். இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன்(71). இவரது மகன் மணிகண்டன். பலசரக்கு கடை மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளார். வியாபாரத்தை விரிவுபடுத்த பழனிச்சாமி என்பவரிடம் கடன் பெற்றுள்ளார்.

அவர், ரூ. 6 லட்சம் கடன் பெற்ற நிலையில் 64 லட்ச ரூபாய் திருப்பி தர வேண்டும் என கந்துவட்டி கும்பல் கேட்டுள்ளது.

இதனை தர முடியாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நடராஜன் மற்றும் அவரது மகன் சென்று விட்டனர். இன்று காலை பழனிச்சாமி ஆதரவாளர்கள் நடராஜனை காரில் கடத்தியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரித்த போலீசார், நடராஜனை சீர்காழியிலிருந்து கடத்தி கடலூர் அருகே வரும்போது கும்பலை மடக்கி பிடித்தனர்.

வாங்கிய கடனை, மகன் திருப்பி தராத காரணத்தினால் நடராஜனை கடத்திய அக்கும்பல் உடல் முழுவதும் கடுமையாக உதைத்து தாக்கியதுடன் கைவிரலையும் துண்டித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது.
நடராஜனை தாக்கிய ஐந்து பேரை கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement