5 ஆண்டுக்கு 800 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி கேட்பு

சென்னை: எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய, ஐந்து ஆண்டுகளுக்கு, தினமும் 800 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை.
இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், மின்சார சந்தைகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது, மத்திய மின் துறை வழிகாட்டுதலின் கீழ், தனியார் நிறுவனங்களிடம் இருந்து தினமும் 800 மெகா வாட் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு, வாரியம் மனு செய்துள்ளது.
இம்மனு, ஆணைய அலுவலகத்தில் உள்ள நீதிமன்ற அறையில், ஆணைய தலைவர் மணிவண்ணன், உறுப்பினர்கள் வெங்கடேசன், மோகன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஓராண்டுக்கு குறைவான காலத்திற்கு மின்சாரம் வாங்கும்போது, யூனிட் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் விலை, கோடை காலம் மற்றும் மாலை நேரங்களில் அதிகரிக்கிறது.
நீண்ட காலத்துக்கு வாங்கும்போது, அதைவிட, குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை பூர்த்தி செய்வதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், யூனிட் சராசரியாக, 7 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'