சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
கூடலுார்:
கூடலுாரில் சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, கூடலுார் வழியாக வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இவர்களின் வாகனங்களை போலீசார் சோதனை செய்து, விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், சுற்றுலா பயணி ஒருவரிடம், பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ஒருவர் லஞ்சம் வாங்குவது தொடர்பான, 'வீடியோ' கடந்த வாரம் வெளியாகி வைரல் ஆனது.
அதன் அடிப்படையில், நீலகிரி எஸ்.பி., உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது. அதில், 'கூடலுாரில் 'ஹைவே' ரோந்து பணியில் ஈடுபட்ட, எஸ்.எஸ்.ஐ., சுலைமான் சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கினார்,' என, உறுதி செய்யப்பட்டது. அவர், ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தொடர் விசாரணைக்கு பின், எஸ்.எஸ்.ஐ., சுலைமான், வாகனம் ஓட்டிய போலீஸ் வினோத் ஆகியோரை, நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அச்சம்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
-
மானியம் இல்லாவிட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா தான் செல்ல வேண்டும்: அதிபர் டிரம்ப் பதிலடி
-
விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி