கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்

துாத்துக்குடி: அரசு மருத்துவமனைக்குள், நோயாளிகளுக்கு கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திலும், உள்நோயாளிகளிடமும் சிலர் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பெண் நோயாளிகள் பிரிவில் செவிலியர்கள் பணியில் இருக்கும்போதே இரு நபர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அவர்களிடம், 'என்ன புத்தகம் கொடுக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பும் நபரிடம், 'ஆண்டவர் இயேசு சுகம் கொடுக்கும் வாசகங்கள் இடம் பெற்ற புத்தகத்தை வழங்குகிறோம்' என தெரிவித்தார். 'கொடுத்த புத்தகங்களை திரும்ப வாங்குங்கள்' என, சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும், அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி சென்றனர்.
அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளிடம் துண்டு பிரசுங்களை வினியோகம் செய்தவர்கள் மீதும், அவர்களை அனுமதித்த டாக்டர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










மேலும்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
-
மானியம் இல்லாவிட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா தான் செல்ல வேண்டும்: அதிபர் டிரம்ப் பதிலடி
-
விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!